Sunday, July 31, 2011


தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



ஏங்க தாஜ் மஹாலுக்கு எப்படி போரது?

டெல்லியிலிருந்து தாஜ் மஹால் இருக்கும் ஆக்கராவிற்கு 200 km
தொலைவுதான். டெல்லிக்கு கிங்கையிலிருந்து விமானம் எடுத்து , அங்கிருந்து ரயில் மூலம் ஆக்கரா காண்ட் ரயில் நிலையத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரயில் நிலையத்திலிருந்து ரிக்‌ஷா எடுத்து செல்லலாம். அல்லது
வாடகை வண்டி ஒன்றை எடுத்து டெல்லியிலிருந்து தாஜ் மஹாலுக்கு செல்லலாம்.



அழகிய தாஜ் மஹால்