ஒரு குரங்கு தாய் தன் குழந்தையை எந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறதோ, அதைப் போலவே நாங்களும் உங்களை எந்த ஆபத்திலும் தள்ளிவுடமாட்டோம்!
மேல் விவரங்களுக்கு, மீனாவை 98573631 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொள்ளலாம் :)
ஷாஜஹான் மும்தாஜுக்கு தன் காதலை வெளிப்படுத்துவதற்கு தாஜ்மஹாலை கட்டினார். அந்த தாஜ்மஹாலுக்கு நாங்கள் இந்த வலைப்பூவை கட்டினோம்....

முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

